திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.

திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.

திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.

குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த விதமாக இருக்கும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள்.

மேலும் கருமுட்டையில் விந்தணு நுழைவதைப் போல ஒரு சிற்பமும் உள்ளது. அந்த காலத்தில் கருமுட்டை வடிவத்தை விந்தணுவின் வடிவத்தை எப்படி தெரிந்து வைத்திருப்பார்கள் அதனால் இது விந்தணு அல்ல பாம்பு என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். அப்படி என்றால் கர்ப்பமுற்ற தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் வடிவத்தை மட்டும் எப்படி தெரிந்து சிலையாக வடித்திருக்கிறார்கள். அந்த சிலையும் குழந்தை அல்ல என்று வாதிட போகிறார்களா இவர்கள்.

பழந்தமிழர்களிடம் அற்புதமான மருத்துவ விஞ்ஞானம் இருந்தது என்பதற்கு சாட்சியே சித்த மருத்துவம்.

மேலும் இந்த சிலைகளில் ஒரு முக்கியமான செய்தியும் ஒளிந்திருக்கிறது. ஓம் என்ற எழுத்திற்கு உள்ளேயும் அறுகோண நட்சத்திரத்திற்கு உள்ளேயும் தான் குழந்தையின் வடிவம் அந்த சிலைகளில் உள்ளது. ஓம் என்ற ஒலியும், அறுகோண நட்சத்திரமும் முருகக் கடவுளோடு தொடர்பு உடையவை.

முருகனை குழந்தை வடிவில் பாலமுருகன் ஆக வணங்கும் வழக்கமும் தமிழர்களிடம் உள்ளது. அதற்கு காரணம் அவர் குழந்தை வளர்ச்சியை பற்றிய விஞ்ஞானத்தை கண்டு பிடித்த சித்தர் என்பதால்.

நாம் கடவுளாக வணங்கும் முருகன் என்பவர் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு உண்மையிலேயே வாழ்ந்த ஒரு சித்தர். குமரிக்கண்டம் என்ற தமிழர்கள் வாழ்ந்த பகுதி அழிந்த போது அந்த பகுதி மக்களை பத்திரமாக இலங்கையில் குடியேற்றியவர் முருகன்.

விந்தணுவின் வடிவில் வேலை உருவாக்கியவர். பல விந்தனுக்கள் கரு முட்டையை நோக்கி சென்றாலும் ஒரே ஒரு விந்தணு மட்டுமே கருமுட்டையை துளைத்து உள்ளே செல்கிறது அந்த வெல்லும் விந்தணுவே வெல் – வேல் என்று பெயரிடப்பட்டது.

காந்த சஷ்டி கவசத்தில் ஒரு வரி வரும்.

“விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேல் முந்து”

குமரிக்கண்டத்தில் இருந்து தப்பிய மக்களுக்கு உணவளிக்க வேண்டிய பெரிய கடமை முருகனுக்கு இருந்தது. அதனால் உணவை உருவாக்கக்கூடிய விவசாயம் என்ற வேளாண்மையை முருகன் கண்டுபிடித்தார். முருகன் கண்டு பிடித்ததால் தான் அதற்கு வேளாண்மை என்ற பெயரும் வந்தது.

மற்ற எந்த தொழிலும் ஆண்மை என்று சொல்லப் படுவதில்லை. இதை மட்டும் ஏன் ஆண்மையோடு சொல்ல வேண்டும்?

விவசாயி வேளாளர் எனப்படுகிறார் அது என்ன வேளாளர் அவர் எந்த வேல்யை ஆள்கிறார்?

மனித உயிர் தோன்றுவதற்கு விதையாக இருப்பது விந்தணு என்ற வேல் தான்.விதையை ஆள்பவர் தான் வேலை ஆள்பவர் வேளாளர். நிலமானது பெண்ணாக ,தாயாக உருவகப்படுத்தப் படுகிறது அதில் விதையை விதைப்பதால் அது ஆண்மை, வேளாண்மை ஆகிறது.

முருகன் இனப்பெருக்கத்திற்காக கண்டு பிடித்த மூலிகை அவர் பெயராலே முருகன் மரம் என்று அழைக்கப்பட்டது.

முருகனின் இரு முக்கோண சின்னம் ஆண் பெண் இணைப்பை குறிக்கும். முருகன் தொடர்பான எல்லாம் ஏன் இனப்பெருக்கம் தொடர்பாக உள்ளது என்றால் குமரிக் கண்டத்தில் பலரை இழந்த தமிழ் இனத்திற்கு இனப் பெருக்கம் தேவைபட்டது . அதனால் அதற்கான ஆராய்ச்சியை முருகன் மேற்கொண்டார். தேவை தானே கண்டு பிடிப்புகளின் தாய்.
கருவுற்ற பெண்ணுக்கு ஏழாம் மாதத்தில் நடத்த படும் வளைகாப்பு முருகன் நினைவாக நடத்த படும் சடங்கு. பெண்கள் முருகனை துணை இருந்து காப்பாற்ற அழைக்கும் சடங்கு. முருகர் காலத்திலேயே கண்ணாடி வளையல் இருந்து இருக்கும்.

சிந்துவெளி நாகரீ கமும் முருகனை வழிபட்ட மக்களின் நாகரீகம் தான். வளையல்கள், ஓம் என்ற சொல்லை குறிக்கும் சுவாஸ்டிகா என்ற சுவற்றியம் குறியீ டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆறு + அப்பன் – ஆர்றப்பா – ஹரப்பா

கந்தன் + ஆறு – காந்தகார்

விந்தணு உருவம் மிக சிறியது சாதாரண கண்களால் பார்க்க முடியாது அதன் உருவை எப்படி முருகன் உணர்ந்தார் ?

உண்மையில் விந்தணுவை விட மிக மிக சிறிய உயிர் துகளையே சித்தர்கள் உணர்ந்து பாடல் தந்திருக்கிறார்கள். இன்றைய நவீன அறிவியலுக்கும் எட்டாத இந்த உலகின் மிக நுண்ணிய உயிர் துகள் எனும் கடவுள் துகள் ( fundamental energy partical ) பற்றிய பாடல்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு

மேவிய கூறது ஆயிரம் ஆயினால்

ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே

-திருமூலர்

அதாவது பசுவின் மயிரை குறுக்கு வெட்டாக லட்சம் கூறிட்டால் அந்த லட்சம் கூறில் ஒரு கூறின் அளவு தான் உயிர் துகளின் அளவு என்கிறார் திருமூலர் . ஆவியை பற்றிய திரை படங்கள் தினமும் வந்து கொண்டிருந்தாலும் ,
உயிரை பற்றி இன்னமும் விஞ்ஞானத்தால் விளக்க முடியவில்லை இது தான் நவீன விஞ்ஞானத்தின் நிலை

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *