சிவவாக்கியம் பாடல் 161 – கருத்தரிக்கும் முன்னெலாம்

சிவவாக்கியம் பாடல் 161 – கருத்தரிக்கும் முன்னெலாம்

161. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்றது எவ்விடம்.?
உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது எவ்விடம்.?
அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்?
திருக்கருத்துக் கொண்டதோ? சிவாயம் என்று கூறுவீர்.

ஆண் பெண் இனைதல் நடைபெறும் இடமான மூலாதாரத்தை திருவரங்கம் என்று கூறுவார் சிவவாக்கியர். அப்படி நம் உடல் உருவாதலின் போது கருத்தரிக்கும் முன்னெலாம் நம் உடல் எங்கே இருந்தது என கேள்வி எழுப்புகிறார். அதேபோல் நம் உருவம் உரு ஆவதற்கு முன் எப்பொழுது உயிர் பெற்றது என கேட்கிறார். இறைவனிடம் அருள் பெற வேண்டும் என்றால், உடல் வேண்டும். அந்த உடல் ஆசை கொண்டதால் தான் உருவானது. மனித குலம் தழைக்க ஆசை ஒரு முக்கிய காரணம். அந்த ஆசை நின்றது எவ்விடம்? என நம்மைப் பார்த்துக் கேட்கிறார். இதைப் பற்றி திரு என்ன கருத்து வைத்துள்ளது? அதை சிவாயம் என்று கூறுவீர். அது சரியா? என கேட்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *