சிவவாக்கியம் பாடல் 160 – நெற்றியில் இயங்குகின்ற

சிவவாக்கியம் பாடல் 160 – நெற்றியில் இயங்குகின்ற

160. நெற்றியில் இயங்குகின்ற நீளமாம் விளக்கினை,
உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியை,
பக்தியில் தொடர்ந்தவர், பரமபதம் அதானவர், அத்தலத்தில் இருந்த பேர்கள், அவர் எனக்கு நாதனே !

நெற்றியில் இயங்குகின்ற நீளமா விளக்கினை என்றால் , ஐந்து புலன்களும் , இனையும் நெற்றியில் மனமாக , நீளமாக எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும். அதை உய்த்துணர்ந்து பாரடா? என்கிறார், அதே போல் , எண்ணம் உருவாகும் இடத்தில் , உள்ளிருக்கும், சோதியை, பக்தியால் தொடர்ந்து அறிந்தவர், அத்தலத்தில் இருந்து பரமனை அறிந்து, பேரறிவு கிடைத்தவர்கள் எனக்கு நாதன் போன்றவர்களே என கூறுகிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *