சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு

சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு

159. நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம்
ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.

விதைகள் காய்ந்த நிலையில் வெப்பத்தை உள் அடக்கி , அந்த விதையில் முளைக்க உள்ள உயிரின், வளர்ச்சியின் அத்தனை தகவல்களையும், சேகரித்து வைத்திருக்கும். அந்தத் தகவல்கள் வெப்ப ஆற்றலாக ( சி ) மறைந்து இருக்கும். விதை எப்பொழுது நீரில் ஊறி , உயிராக உயிர்த்தெழுந்து , முளைக்க ஆரம்பிக்கிறதோ, அந்த வெப்ப ஆற்றல் தான் உடலாகிறது. நகராத உயிரிணங்கள் , வேரிவிருந்து சத்துக்களை எடுத்து வளரும். நகரும் உயிரிணங்கள், மண்ணீரல் மூலம் சத்துக்கள் எடுத்து வளரும். நீரையள்ளி , நீரில் விட்டு நீர் நினைந்த காரியம், இதன் அடிப்படை தெரியுமா என கேட்கிறார். யாரை நினைத்து நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர், என அறியாமையில் இருப்போரை பார்த்து கேட்கிறார். நமக்கு சிவ பதத்தை அடையும் வித்தையை சொல்லிக் கொடுக்கிறார். வேரை உன்னி , வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த நம்மை சி எனும் வெப்பத்தை , சீரையுன்ன வல்லீரேல் சிவபதங்கள் சேரலாம் என்கிறார். ஒளி, காற்று , வெப்டம் மூன்றும் சேர்ந்ததுதான் விதை. நாம் இயங்குவதற்கு அடிப்படை இம்மூன்றும் தான். இதை நன்கு புரிந்து , வெப்ப ஆற்றலை விரையமாக்காமல், இயக்கத்தில் இருந்தால் , உடல் ஆரோக்கியமாக, சிவபதத்தை அடையும் முயற்சியில் அமைதியாக மனம் இயங்கும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *