சிதம்பர அ ரகசியம்

சிதம்பர அ ரகசியம்

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தென் இந்தியா அனைத்தும் தமிழர்கள் தான். இந்த 1500 ஆண்டுகளில் நம்மை மொழியால் பிரித்தவர்கள் யார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம். நம் தமிழ் எழுத்துக்களின் வடிவங்களில் ஒலியின் குறிப்புகள் தான் இருக்கும், அதற்கு அர்த்தம் , காரணம் காரியங்கள் இருக்காது என்பது இக்கால திருட்டு அறிஞர்களின் கண்டு பிடிப்பு. ஆனால் முதல் எழுத்தான , அ வுக்கு உண்டான பெரு வெடிப்பை பற்றிய அனைத்து தகவல்களும் அதில் உள்ளது என்பது சிதம்பர பிரம்மாண்ட கட்டுமானங்கள் சாட்சி. அதை சிதம்பர ரகசியமாக்கியவர்களை சிவன் பார்த்துக் கொள்வார் . ஆனால் அதை தமிழ் எழுத்தின் முதல் எழுத்து என நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உயிர் எழுத்துக்கள் பனிரெண்டும் அண்ட வெடிப்பு முதல் மனிதன் பூமியில் உருவானது வரையிலான , periodic table தான். அதில் ஒவ்வொரு எழுத்தும் காலங்களால் குறிக்கப் பட்டுள்ளது. அதேபோல் மெய் எழுத்துக்கள் 18-ம் நம் உடல் அமைப்பின் ஆறு சக்கரங்களின் , 6 ராச உறுப்புகள் 6 துணை உறுப்புகள், 6 சுரப்பிகளின் வடிவங்கள் தான். ஃ என்ற ஆயுத எழுத்து நம் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இனை சூரியன்களின் வடிவம் தான். 3000 வருடங்களுக்கு முன் மூன்றாம் தமிழ் சங்கத்தின் உண்மையான அறிஞர்கள் விவாதித்து உருவாக்கிய எழுத்துக்களை , இந்த 1500 வருடங்களாக அவர்களின் சிற்பிகளை கொண்டு சிதைத்தும், மாற்றியும் அழித்தும் , சிற்பிகள் வடிவமைத்தது என வாய் கூசாமல் இந்த பொய் அறிஞர்களின் , கண்டுபிடிப்பை கடந்து செல்வோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *