152. ஆட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்,
ஆட்டு இறைச்சி அல்லவோ? யாகம் நீங்கள் ஆற்றலின். மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்,
மாட்டிறைச்சி அல்லவோ? மரக்கறிக்கு இடுவது.
ஆட்டு இறைச்சி தின்ற தில்லை அன்றும் இன்றும் வேதியர். ஆனால் நீங்கள் யாகம் வளர்த்து பூசை செய்யும் போது அதில் ஆட்டு இறைச்சிதானே போடுகிறீர்கள். மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் , ஆனால் மரம் செடி கொடிகளுக்கு உரமாக , மாட்டின் இறைச்சியால் செய்யப்பட்ட உரங்களைத் தானே இடுகிறார்கள். என்கிறார். ஆனால் சிவவாக்கியர் இறைச்சி சாப்பிட வேண்டும் என கூறவில்லை. வேதியர் என வேடமிட்டு மக்களுக்குத் துன்பம் இழைக்கும் செயல்களில் ஈடுபடும் வேதியர்களைச் சாடுகிறார். உயிர்பலி கொடுக்காமல் இருப்பவர்கள் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். திருட்டு கொள்ளைகளிலும், ஏமாற்று வேளைகளில் ஈடுபடும் வேதியர்களைத் தான் அவர் கடுமையாக விமர்சிக்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments