சிவவாக்கியம் பாடல் 148 – செம்பினிற் கழிம்பு

சிவவாக்கியம் பாடல் 148 – செம்பினிற் கழிம்பு

148. செம்பினிற் கழிம்பு வந்த சீதரங்கள் போலவே,
அம்பினில் எழுதொனாத வனியரங்க சோதியை,
வெம்பி வெம்பி வெம்பியே, மெலிந்து மேல் கலங்கிட,
செம்பினில் கழிம்பு விட்ட சேதியது காணுமே!

செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் , பச்சையாக ஒரு படிவம் படியும். அதைத் துலக்கினால் , பாத்திரம் பல பல வென்று தகிக்கும். அது போல நாம் நம் உள் இருக்கும் மனி அரங்க சோதியை , வெம்பி வெம்பி வேண்டி அதாவது மூச்சுக காற்றை. கவனித்து அந்த ஆழ் மனதில் குடி கொண்டால் , வாழ்வியலும் நன்றாக இருக்கும். நம்மை சுற்றி நடக்கும் மாயைகள் புரியும், செம்பினில் கழிம்பு விட்டு சோதியது காணுமே! என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *