சிவவாக்கியம் பாடல் 133 – சித்தர் ஓதும்

சிவவாக்கியம் பாடல் 133 – சித்தர் ஓதும்

133. சித்தர் ஓதும் வேதமும், சிறந்த ஆகமங்களும்,
நட்ட காரணங்களும், நவின்ற மெய்மை நூல்களும்,
கட்டி வைத்த போதகம் , கதைக்குகந்த வித்தெலாம்.
பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின்.

இறைவனை அடைய நம் சித்தர்கள் , ஓதிய வேதங்களும், சிறந்த ஆகமங்களும், நடுகல் வைத்து வழிபட்ட காரணங்களும், அவர்கள் இயற்றிய மெய்மை நூல்களும், புலன்களை அடக்கி கட்டி வைத்த போதகமும், சொல்லித் தந்த வித்தைகளும் பெட்டதாய் (தேவையற்றதாய்) முடிந்ததே பிராணனை நான் அறிந்த பின் , என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *