சிவவாக்கியம் பாடல் 132 – வேனும் வேனும்

சிவவாக்கியம் பாடல் 132 – வேனும் வேனும்

132. வேனும் வேனும் என்று நீர், வீண் உழன்று தேடுவீர்,
வேனும் என்று தேடினாலும் உன்னதல்லதில்லையே!
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்த பின்,
வேனுமென்ற அப்பொருள் விரைந்து காணலாகுமே!

இறைவனை அடைய வேண்டி வேனும் வேனும் என்று வீண் உழன்று தேடுவீர், அவனை அடைய வேண்டித் தேடினாலும் அவன் உன் உள் இருப்பதை அறியாமல் தேடுவதாகத்தான் அர்த்தம். அவனைத் தேடும் வேட்கையைத் துறந்தபின், அவனை விரைந்து காணலாம் என்கிறார். அவனைத் தேடுவதை விட்டு விட்டு, அவன் உன் உள்ளே ஆழ் மனமாக உறைந்து இருப்பதை அறிய வேண்டும் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *