சிவவாக்கியம் பாடல் 109 – மண் கிடாரமே

சிவவாக்கியம் பாடல் 109 – மண் கிடாரமே

109.மண் கிடாரமே சுமந்து, மலையில் ஏறி மறுகுறீர்,
எண் படாத காரியங்கள் இயலும் என்று கூறுவீர்.
தம்பிரானை, நாள்கள் தோறும், தரையிலே தலை பட.
கும்பிடாத மாந்தரோடு, கூடி வாழ்வது எங்கனே?

அவன் நம் உள்ளேயே எளிமையாக இருப்பதை அறியாமல் , இறைவனிடம் வேண்டி , வேண்டுதலுக்காக சுட்ட மண்ணால் செய்த பொருட்களை , சுமந்து மலைகளின் மேல் ஏறி, அவன் அருளுக்காக ஏங்கி மறுகுகிறீர்கள். எண்கள் தான் இறைவன் என்னுமளவிற்கு எண்களாகத்தான் இந்த உலகம் இயங்கிக கொண்டு உள்ளது. உயிர் உற்பத்தி கூட எண்களால் தான். 108, 111, 36, 37, 32,96 369, 786 , 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 , 1.6 (Golden ratio) இப்படி பல முக்கியமான எண்கள் தான் உலகை இயக்கிக கொண்டு உள்ளது. ஆனால் எண்கள் இல்லாத காரியங்கள் இயலும் என கூறுகிறீர். (திராவிடர்களைத்தான் ) இப்படிப்பட்ட தம்பிரானை, தினமும் தலை தரையில் பட கும்பிடாதவர்களுடன், எப்படி கூடி வாழ முடியும் என்கிறார். இப்படி எண்களின் முக்கியத்துவம் உணர்ந்து , எண்களை உருவாக்கி, அதன் அர்த்தம் புரிந்து அதை உணர்ந்த நம முன்னோர்கள், எண் என்ப ஏனை எழுத்தென்ப , கண் என்ப வாழும் உயிரக்கு என வாழ்வாங்கு வாழ்த்தவர்கள். ஆனால் அந்த எண்களை தாங்கள் தான உருவாக்கினோம் என, பெருமை பட்டுக கொள்பவர்களையும், நமக்கு எண்கள் தெரியாது என நம்மவர்களே நினைப்பதும் , என்னவென்று சொல்வது ?

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *