சிவவாக்கியம் பாடல் 74 – மண் கலம்

சிவவாக்கியம் பாடல் 74 – மண் கலம்

74.மண் கலம் கவர்ந்த போது, வைத்து வைத்து அடுக்குவர்.
வெண்கலம் கவர்ந்த போது, நாறும் என்று பேணுவார்.
தன் கலம் கவர்ந்த போது நாறும் என்று போடுவார்.
என் கலந்து நின்ற மாயம் , என்ன மாயம்? ஈசனே !.

நம்மை கவர்ந்த மண் கலம் ஏதாவது இருந்தால் அது உடைந்து விடாமல் இருக்க , அடுக்கி வைத்து உடையாமல் பார்த்துக் கொள்வார்கள். அதே போல் வெண்கலத்தில் ஏதாவது பாத்திரங்கள் இருந்தால், அது பாசம் பிடித்து நாறும் என்று , 6 மாதத்திற்கு ஒரு முறை விளக்கி , துணிகள் போட்டு கட்டி பேணுவார்கள். ஆனால் நம்முடைய உடல் உயிர் பிரிந்த போது, அதை நாறும் என்று குழிக்குள் போடுவர். இப்படி நாறும் இந்த உடலில், என்னுடன் எப்படி நீ கலந்து இருக்கிறாய், இது என்ன மாயம் , என ஈசனைப் பார்த்து ஆச்சரியப் படுகிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *