சிவவாக்கியம் பாடல் 58 – அறத்திறங்களுக்கும் நீ

சிவவாக்கியம் பாடல் 58 – அறத்திறங்களுக்கும் நீ

58. அறத்திறங்களுக்கும் நீ, அண்டம் எண் திசைக்கும் நீ,
திறத்திறங்களுக்கும் நீ, தேடுவார்கள் சிந்தை நீ,
உறக்கம் நீ, உணர்வு நீ, உட்கலந்த சோதி நீ,
மறக்கொனாத நின் கழல், மறப்பினும் குடி கொளேல்.

முருகன் உருவாக்கிய அறம் சார்ந்த வாழ்வியல், வாழ்வதற்கு, ஒரு திறன் வேண்டும். அந்த திறன் ஆக இருப்பவன் அவன். அண்டமாக இருப்பவனும் அவனே. 64 கலைகளை உருவாக்கி , ஒவ்வொரு கலைகளிலும் , நுட்பமாக திறனை வளர்த்து , அந்த திறமையின் திறனாக இருப்பவனும் நீ, இறைவனை தேடுபவர்களின் சிந்தையாகவும் இருப்பவனும், அவனே !. தினமும் அவரவர் வேலைகளை முடித்து, உறக்கமாகவும், நம் ஐம்புலன்களால், உணர்வுகளாக இருப்பவனும், நம்மில் உட்கலந்த சோதியாக, மணமாக இருப்பவனும், அவனே!. மறக்கக் கூடாத உன் தண்டையுடன் கூடிய உன் கால்களை பற்ற மறந்த குடிகளை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *