சிவவாக்கியம் பாடல் 34 – செய்ய தெங்கிலே

சிவவாக்கியம் பாடல் 34 – செய்ய தெங்கிலே

34. செய்ய தெங்கிலே இளநீர், சேர்ந்த காரணங்கள் போல்,
ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில் கொண்டனன்.
ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில், கொண்ட பின்,
வையகத்தில் , மாந்தர் முன்னம் வாய் திறப்பதில்லையே!

தென்னை மரத்தில், தேங்காய் ஆவதற்காக, இளநீர் , அந்தக் காய்க்குள், புகுந்த காரணங்கள் போல், அந்த ஐய்யன், அதாவது இறைவன், என் உள்ளம் , புகுந்து கோயில் கொண்டு விட்டான். இங்கே, “என் உள்ளத்தில் தான் கோயில் கொண்டு விட்டான்” என்று கூறுகிறார். “என் உடலில் புகுந்து விட்டான்” என்று கூறவில்லை. உள்ளம் என்றால் நம் உடலுக்குள் தான். உள்ளதா? ‘ அவன் என் உள்ளத்தில் , கோயில் கொண்டு , விட்ட பின், என்னால், இறைவனை புரியாத, தவறாக புரிந்து கொண்டு இருக்கும், மாந்தர்கள் முன், வாய் திறக்க முடியவில்லை என்கிறார். ஏனென்றால், இறைவனைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் , அவர்கள் இல்லை என்று அவருக்குப் புரிந்ததால்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *