சிவவாக்கியம் பாடல் 16 – தூரம், தூரம்

சிவவாக்கியம் பாடல் 16 – தூரம், தூரம்

தூரம், தூரம், தூரம் என்று சொல்லுவார்கள், சோம்பர்கள்.
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப் பராபரம்.
ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும், ஊமைகாள்!
நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்து கொள்ளுமே !

நம்மை படைத்து காத்து வரும் இறைவனை , எங்கே என கேட்டால், அவர் இருப்பது தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் , சோம்பேறிகள். பாரும் என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்தப் பாரும் , விண் எங்கும் பரந்து இருக்கும் , அப் பரந்த பராபரம். அதை தேடி ஊர் ஊராகவும், நாடு நாடாகவும், காடு காடாகவும் தேடி , உழன்று போய் மறுபடியும் தேடி அலையும் ஊமைகாள்! ‘ அதை எங்கும் வெளியே தேடாமல், உங்கள் உள்ளே அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *