சிவவாக்கியம் பாடல் 12 – கதாவு பஞ்ச

சிவவாக்கியம் பாடல் 12 – கதாவு பஞ்ச

கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்,
இதாம், இதாம் அதல்லவென்று, வைத்துழலும் ஏழைகாள்.
சதா விடாமல் ஓதுவார், தமக்கு நல்ல மந்திரம்.
இதாம், இதாம் ராம ராம ராமம் என்னும் நாமமே?

பாவங்களும். பஞ்சமா பாதகங்கள் எதை செய்தாலும் , அதன் கர்மாவை அண்ட விடாமல் செய்யும் மந்திரம் எது? என்றால் ராம, ராம எனும் மந்திரம் தான். எனவும் அந்த ஓம் நமசிவாய எனும் மந்திரம் இல்லை என்றும் அந்த மந்திரம் எது என்றால் ராம ராம எனும் நாமத்தை வைத்துழலும் ஏழைகாள். அந்த ராம ராம என மந்திரத்தை சதா விடாமல் ஓதுவார்கள் . ஏனென்றால் அது தமக்கு நல்லது செய்யும் மந்திரம் என்று.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *