சிவவாக்கியம் பாடல் 9 – நினைப்பதொன்று கண்டிலேன்

சிவவாக்கியம் பாடல் 9 – நினைப்பதொன்று கண்டிலேன்

9.நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.

எனக்கு உள் இருந்து நினைக்கும் அது எது? என நான் கண்டிலேன். அது நீயாக இருக்குமோ? நீயலாது வேறில்லை.
மாயை வேறு மாய்கை வேறு. மாயை என்பது இயற்கையே (இறையே) மறைப்பது. இறைவனுக்கு ஐந்து தொழில்கள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல். அதில் அவனே மறைப்பது மாயை. நம்மிடம் பொய் சொல்லி , நம் மனதை மாற்றி, மறைப்பது மாய்கை. அதாவது பூமிதான், சூரியனைச் சுற்றுகிறது. ஆனால் சூரியன் உதித்து மேலே வருவது போலவும், மேற்கே மறைவது போலவும், தெரிவது மாயை. ஆனால் சூரியன் சுற்றுவதில்லை, நிலாவுக்குச் சென்று திரும்பினோம், என்று பொய் கூறி நம் மனதை , மனிதன் திருப்புவது மாய்கை. இப்படி விழித்திருக்கும்போதும், தூங்கும் போதும், நினைப்பு மாய், மறப்பு மாய், நின்ற மாய்கை மாய்கையே ! அனைத்துமாய், இந்த உடம்புமாய் (அகண்டமாய்) , வெளி, காற்று, வெப்பம் எனும் ஆதிகளுக்கெல்லாம் முன் இருக்கும் அனாதியான, இறைவனாய், என்னுள் நீயும், உனக்குள் நானும் , இருக்கும் படியான இந்த அமைப்பு அமைந்தது எப்படி?

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *