சிவவாக்கியம் பாடல் 5 – ஓடிஓடி ஓடிஓடி

சிவவாக்கியம் பாடல் 5 – ஓடிஓடி ஓடிஓடி

5.ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

இந்த சடங்களான, உடல்கள் உருவாக காரணமான, விந்து ஓடி ஓடி நாதத்தில் உட்கலந்த சோ(தீ)யை , அதாவது விந்து நீரில், உயிர்கள், வேல் வடிவில், பாம்பு போன்று நீந்தி – நீந்தி நாதத்தில் உட்கலந்து நின்று , உருத்தரித்து உடல்களாகின்றது.
அந்த சோதிமயமான , நம் உயிராகிய சோதியை இந்தப் பரந்த வெளியில், நம் பிண்டத்தில், நாடி நாடி நாடி நாடி அனேகம் பேர் நாட்களை கழித்துக் கொண்டு உள்ளனர். அவர்கள் , அதை (சோதியை) கண்டு பிடிக்க முடியாமல் வாடி வாடி வாடி வாடி மாண்டு போனவர்கள் கோடி கோடி கோடியே.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *