வான வேடிக்கைகளுக்குத் தேவைப்படும் வெடி மருந்துகள் 3000 ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் இருந்தனவா?

வான வேடிக்கைகளுக்குத் தேவைப்படும் வெடி மருந்துகள் 3000 ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் இருந்தனவா?

[30/01, 17:30]  : வான வேடிக்கைகளுக்குத் தேவைப்படும் வெடி மருந்துகள் 3000 ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் இருந்தனவா? இருந்தன என்றால் நம் மன்னர்கள் அந்தத் தொழில் நுட்பம் தெரியாமல் வெள்ளையர்களின் பீரங்கி, துப்பாக்கிகளிடம் தோற்றுப் போனது ஏன்?

[30/01, 17:30] : நாம் கோவில்களை , எத்தனை, ஆண்டுகளாக கட்டிக் கொண்டிடுக்கிறோம். கோவில்கள், கட்ட, கிணறுகள் வெட்ட / வெடிமருந்து இல்லாமல் , முடியுமா ? ஆனாலும் அந்த வெடிமருந்துகளை , நம் சித்தர்கள் தெரிந்து, வைத்திருந்தாலும் ‘ஒரு வெடியைக் கூட மனிதர்கள் மேல் , திருப்ப யோசித்தது கூட கிடையாது. அதை நம்மிடமிருந்து , திருடி அதை மனிதர்கள் மேல் , திருப்பி , இதை அறிந்து வைத்திருந்த சித்தர்களையும், ஆசான்களையும், 1800 வருடங்களுக்கு முன்னால் , தேடி தேடி சித்தர் வதை செய்து , கழவேற்றிய கதைகளை , மறைத்தாலும் , ஆங்காங்கே என்னற்ற எச்சங்களாக , புதைந்தும் , ஒவியங் களாகவும் ,….. தேடினால் கிடைக்கும்

[30/01, 17:30] Govindarajan Rravichandra: களப்பிரர்கள் படையெடுப்பிற்கு பின் நம் தமிழ் குடிகளையே நமக்கு எதிராக , சூழ்ச்சிகளால் . திருப்பி , எல்லா formula, தொழில் நுட்பம் தெரிந்த ஆசான் களைக் கொன்று விட்டு, தொழில் நுட்பங்களை திருடி, ஆங்கிலேயர்கள் , பீரங்கிகளுடன் வந்தார்கள் , அதற்குள் , 10 தலைமுறைகளாக , குழந்தைகளுக்கு ,கல்வி கடத்த முடியாமல் , கல்விக் கூடங்களாக , இருந்த , கோவில்களைப் பிடுங்கி , அவர்களிடம் ஒப்படைத்து , வழிபாட்டுத் தளங்களாக , மாற்றி கல்வியை அழித்த பின்னர் தான், ஆங்கிலேயர்கள் , உள்ளே வந்து , ஆங்கிலத்தை திணித்து , தமிழை அழிக்க முயற்சித்தாலும் , இன்னும் அழியாமல் நிற்கிறது தமிழ் .

[30/01, 17:30] Govindarajan Rravichandra: நம் சித்தர்கள் , நவீனத்திற்கு எதிரானவர்கள் என்று யார் சொன்னது. அனைத்து தொழில் நுட்பங்களையும் , தேவைக்கேற்ப , வடித்தவர்கள் , நம் சித்தர்கள் . வியாபர நோக்கிலும் , மனித குல அழிவிற்கும் வழி கோலும் , விஞ்ஞானம் , தான் தவறு. மற்றும் தேவையான அறியல் பூர்வமான கருவிகளையோ , கண்டு பிடிப்புகளை யோ? , யாரும் வேண்டாம் என்று சொல்வதில்லை. நம்மிடம் அரசியல் இருந்திருந்தால் , இன்னும் , மனித குலத்தை பாதிக்காத அதி நவீன அறிவியல் கண்டு பிடிப்புகளாக இருந்திருக்கும். சித்தர்களால் வடிக்க பட்ட , நிலா சுற்று , பூமி சுற்று ,சூரிய சுற்று , சத்தி மைய பின் சுழற்சி வரை அறிந்தவர்களின் , கணக்குகளைப் புறந்தள்ளி விட்டு, இன்னும் சூரிய சுற்றே இல்லை என முழ பூசனிக்காயை , ேசாற்றில் மறைக்க முயற்சிப்பது , என்ன நவீன விஞ்ஞானம். அதை அவர்கள் என்ன சொல்கிறார்கள் , என பார்த்து சரியில்லா விட்டால் , உண்மைகளை கண்டறிய வேண்டும். அவர்களை கொன்று ஒழித்து , வியாபரத்திற்காக, விஞ்ஞானத்தை . மனித குலத்தை அழிவில் நிற்க வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் வேண்டாம் , நாமாவது வாணத்தை ஒரு 10 நாட்களுக்கு மாலையிலும் , காலையிலும் பார்த்தாலே , நமக்குப் புரிந்து விடும். சூரிய சுற்றே இல்லை என்று கூறிவிட்டு இப்பொழுது ஆயிரம் கேள்விகளை எதிர் கொண்டு , சூரியன் சுற்றுகிறது என ஒப்புக் கொள்வது என்றால் இதில் , ஏதோ சூது இருக்கிறது என்று தெரிய வில்லையா?

 

வணக்கம்.

 

நமது மரபு மருத்துவத்தில் தொடர்ச்சியாக வெடி மருந்துகள் அறம் சார்ந்த நோக்கில் பயன்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் அதன் தொன்மை பற்றிய அறிவும் தெளிவும் இன்னும் எனக்குக் கிடைக்கப் பெறவில்லை. இன்றும் ஆயுதங்கள் மற்றும் வான வேடிக்கைகள் தயாரிப்புக்கான மூலப் பொருளை *வெடி மருந்து* என்று தான் பேச்சு வழக்கில் நாம் புழங்கி வருகிறோம். வெடிக்கச் கூடிய பொருட்களின் சேர்மானத்தில் இருந்து உடல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்பட்டதன் தொடர்ச்சி தான் *வெடி மருந்து* என்பது வேர்ச்சொல் ஆய்வு.

 

கெந்தகம், தாளகம், துத்தம், பூதம், மனோசீலம், வெடியுப்பு, இந்துப்பு, சவுட்டுப்பு போன்ற சில பொருட்களின் குறிப்பிட்ட கலவை மற்றும் செய்முறையில் வெடி மருந்துகள் தயாரிக்கும் முறை அவற்றை பயன்படுத்தும் முறைகளை சித்தர்களும் அவர்களிடம் கற்றறிந்த மரபு வழி பண்டுவர்களும் தலைமுறை தலைமுறையாகக் கைக்கொண்டிருந்தனர்.

 

17 மற்றும் 18ம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசு மற்றும் டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு காலக்கட்டத்தில் வெடி மருந்துகளை ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கினர். வெடி மருந்து தொழில்நுட்பம் குடி மக்களுக்குத் தெரிந்துவிட்டால் அரச அதிகாரத்திற்கு சிக்கல்கள் வரக்கூடும் என்பதால் வெடி மருந்து தயாரிக்கும் பண்டுவர்கள் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுக்கும் கண்காணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டனர். ஆயுதங்களுக்கும் கிணறு வெட்டி முறிக்கவும் வெடி மருந்தைப் பயன்படுத்தும் முழு உரிமையும் மன்னரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த வெடிப் படைக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் குடியானவர்களின் கைகளுக்கு இந்தத் தொழில் நுட்பம் சென்று விட, ராச துரோகம் என்ற பெயரில் பழநி சுற்று வட்டாரத்தில் ஏராளமான பண்டுவர்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்களின் உறவினர்கள் குல நீக்கம் செய்யப்பட்டார்கள்.

 

இந்தத் தகவல்கள் அனைத்தும் தமிழ்த்திரு. இரா. முத்துநாகு எழுதிய சுளுந்தீ எனும் நூலில் இருந்து அறிந்து கொண்டவை. தமிழ் மரபின் மருத்துவ அறிவு, அவை சார்ந்த சமூகத்தின் குறிப்பிட்ட கால வரலாற்றை சான்றுகளுடன் விளக்கும் புனைவின் வழியான முக்கிய ஆவணம் இந்நூல் என்பது என் கருத்து.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *