வாணம் பார்த்தால், வானத்தில் நம் இறைவனும் , கடவுளர்களும் , மாயை நீக்க , நம்மைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வாணம் பார்த்தால், வானத்தில் நம் இறைவனும் , கடவுளர்களும் , மாயை நீக்க , நம்மைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவன் மிகப் பெரியவன் . இறைவன் வேறு, கடவுளர்கள் வேறு. நமது அண்டத்தைப் போல் (milky way ) கோடிக்கணக்கான , அண்டங்களுக்கு அதிபதி தான் . இறைவன். நம் அண்டத்தின் , அதிபதிகள் , அடர் சக்தியாக இருந்த காளி , நம் கண்களுக்குத் தெரியும் சிவமாகவும் , படர் சக்தியான , கருமையங்களாகவும் , நம் அண்டமெங்கும் இருக்கிறார்கள். அதில் ஒரு கருமையமான சக்தியிலிருந்து பிறந்தவன் , நம் சூரிய குடும்பத்தின் அதிபதியான சூரியன். பூமியும் , சந்திரனும் , சூரியனின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டு , சுழலும் மற்ற 5 கோள்களுக்கு அதிபதி சூரியன். அதிபதிகள் அனைவரும் இறைவன். இதையெல்லாம் அறிந்து அந்தந்த காலகட்டங்களில் , நம்முடனேயே , பிறந்து , நம்மோடு வாழ்ந்து . நமக்கு அவற்றை தேவைகளுக்கேற்ப , அந்தந்த காலங்களில் , அறிவித்து , குடங்களுக்குள் (தாளி) சீவ சமாதி அடைந்தவர்கள் தான் நம் கடவுளர்கள் சிவத்தையும் , சக்தியையும் அறிவித்த சிவன், வள்ளி (வெள்ளி) விநாயகன் (தெய்வயானை), ஆகிய உருவக தெய்வங்களைக் ஆக்கி கொடுத்த முருகன், இராவாணன், இந்திரன், கிருட்டிணன் எனும் கருத்தினன்.. விண்ணவன் எனும் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தின் மூலம் , தான் அறிந்தவற்றையெல்லாம் நமக்கு , உயிர் எழுத்துக்களாகவும், மெய் எழுத்துக்களாகவும் , உயிர்மெய் எழத்துக்களாகவும், முக்கண்ணாகிய ஆயுத ( சக்தி) எழத்தையும், வரலாறுகளை தக்க வைத்த ராசிகளையும் , 3600 வருடங்களுக்கு முன் வடித்துக் கொடுத்த உலகளந்தவன், ஏழ கன்னிமார்கள் எனும் உருவகங்களும் இன்னும் ஏராளமான சிறு தெய்வங்களும். இப்படி நம்மை வழி நடத்திய கடவுளர்களை நாம் வழிபடுவது முறை தான். எப்பொழுதுமே இறைவன் தான் படைக்கப் போகும் உயிர்களுக்கு இறையை படைத்து விட்டுத்தான் , ஆனந்தமாக வாழ அவன் படைத்த அழகான , வளமான பூமியில் வாழ உயிர்களை அனுப்புவான். ஆனாலும் இதையெல்லாம் அறிந்து மகிழ , மனத்தை மனிதனுக்கு மட்டும் கொடுத்து, மனிதனைப் படைத்தான் இறைவன். ஆனால் அந்த மனதை , வேறு தீய வழிகளில் கையாண்டால் , அழிவு நமக்குத் தான். இறைவனுக்கு ஈவு இறக்கம் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. அவையெல்லாம் நம்முடன் பிறந்து நம்மோடு வாழ்ந்த கடவுளர்கள் தான் நம்மை நல்வழிகாட்டி , நாம் கேட்டதை வழங்கவும், தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினால் தண்டிக்கவும் காத்திருக்கிறார்கள். நாம் தான் , நமக்கு யார் துன்பம் இழைக்கிறார்கள் என அறியாமல் , சுட்டிக் காட்ட தெரியாமல், அவர்கள் உருவாக்கிய பணம் எனும் மாய வலையில் மாட்டி , அவர்களுக்காக ஓடாய் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். வாணம் பார்த்தால், வானத்தில் நம் இறைவனும் , கடவுளர்களும் , மாயை நீக்க , நம்மைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *