இதுவரை நாம் பார்த்த அனைத்து புத்தகங்களிலும் உள்ள தரவுகள் அடுத்த புத்தகத்தை மேற்கோள்கள் காட்டியே இருக்கும். ஆனால் யாரும் வானத்தைப் பார்த்து அதைப் புரிந்து கொண்டு எழுதிய மாதிரி தெரிய வில்லை.
மா சொ விக்டர் ஐயாவும் வானத்தைப் பார்த்து பதிவு செய்ய வில்லை.
வானத்தைப் பார்த்து இருந்தால் அதில் கார்த்திகை தான் முதல் நல் சித்திரமாக இருக்க முடியும் என உணர்த்து இருப்பார்.
ஏன் என்றால் ரிதபத்தில் ஆரம்பித்த நம் ராசிகள் நகர்ந்து இப்பொழுது 60 திகிரி நகர்ந்து மீனம் முழுதும் இப்பொழுது ஆக்கிரமித்து , உத்திரட்டாதியை முதல் நல் சித்திரமாக இருப்பதை march – 22 சம நாள் அன்று காலை சூரியன் நில நடுக்கோட்டில் உதிப்பதை வானத்தில் பார்க்க முடியும்.
ரிதபத்தில் ராசிகள் ஆரம்பிக்கப் பட்ட பொழுது சித்திரை – 1 -ல் சூரியன் கார்த்திகை நல்சித்திரத்தில் தான் இருந்து இருக்க முடியும்.
ரோகினியில் ஆரம்பித்து இருந்தால் 73.33 திகிரி நகர்ந்து இப்பொழுது சூரியன் நில நடுக் கோட்டில் வரும் பொழுது பூரட்டாதியில் எழுந்திருக்க வேண்டும்.
ஆனால் சூரியன் நில நடுக் கோட்டில் இருக்கும் பொழுது தொடு வானில் உத்திரட்டாதி தான் எழுகிறது.
கார்த்திகையில் நட்சத்திரத்தை முருகன் நினைவாகவும், ரிதப ராசியை சிவனின் நினைவாகவும் கொண்டு முதல் ராசியாக 3600 ஆண்டுகளுக்கு முன்பு திருமால் ராசிகளை வடிவமைத்தார்.
எப்பொழுதுமே நம் வரலாறுகளை மறைக்க ஆட்சியாளர்களின் தாக்கததால் புத்தகம் எழுதுபவர்கள் நான்கு உண்மைகளைச் சொல்லி இரண்டு பொய்களைப் புகுத்தி விடுவார்கள். அதை ஆதாரமாக எடுப்பவர்கள் ஏமாந்து விடுவார்கள்.
ஆனால் வானத்தை எவரும் திருத்த முடியாது. வானில் சரியான தரவுகள் உள்ளது அதைப் பார்த்து உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.
வாண் பார்ப்போம் உண்மைகளை உணர்வோம்.
எந்தப் புத்தகத்திலும் இலக்கியங்களிலும், உலக மொழிகளில் தரவுகளைத் தேடுபவர்கள் நம் கோயில் கொடிமரங்களையும், கருவறைகளையும், எதற்காக நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்துச் சென்றார்கள் என்பதையே அறிந்து கொள்வில்லை. கண்ணில் நன்கு தெரியும் அந்தத் தரவுகளை நம் புத்தகங்களிலோ, கட்டுரைகளிலோ எங்கும் காணவில்லை.
நம் கோயில்களில் உள்ள கொடி மரங்களைக் புரிந்து கொண்டாலே நம் முன்னோர்களின் வியக்க வைக்கும் அறிவைத் உணர்ந்த கொள்ள முடியும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments