சிவவாக்கியம் பாடல் 204 – அன்னை கர்ப்பத்

சிவவாக்கியம் பாடல் 204 – அன்னை கர்ப்பத்

204. அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே.
உன்னை தொக்கு உழலும் தூமை உள்ளுலே அடங்கிடும்.
பின்னையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே!!

முன்னையே அவதரித்த சுக்கிலம், அன்னை கர்ப்பத் தூமையில் (கருமுட்டையில்) தரித்ததும் பனித்துளி போலாகுமே. அப்பாவின் விதைப்பையிலிருந்து சுக்கிலத்தில் உயிர்கள் உயிர் பெற்று நீந்தி தொக்காக (கெத்தாக) தாயின் கருப்பையில் உள்ள கருமுட்டையில் தரித்தவுடன் அதன் உள்ளுலே அடங்கி பனித்துளி போலாகுமே. அந்த துளிதான் உடலாக, தன் மாத்திரைகள், ஐம்பூதங்களாக, ஐம்புலன்களாக, ஐந்து இந்திரியங்களாக வடிவெடுத்தது வளர்ந்து பின்னால் குழந்தையாக பிறப்பதும் அந்த கருமுட்டை தான் கானும் பித்தரே என்கிறார். கானும் என்றால் என்னங்காணும் எப்படி இருக்கிறீர்? அந்த கானும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *