Month: August 2024

சிவவாக்கியம் பாடல் 32 – நெருப்பை மூட்டி

32. நெருப்பை மூட்டி, நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே விருப்படுமாடு நீர் குளிக்கும், வேதவாக்யம் கேளுமின். நெருப்பும், நீரும் உம்முளே, நினைத்துக் கூற வல்லிரேல்? சுருக்கமற்ற சோதியை, தொடர்ந்து கூடலாகுமே! இறைவனை உணர்ந்து, அவன் பாதங்களைப் பற்றி , அவனைப் பற்றி , தன் சந்ததிகளுக்குக் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 31 – அண்டர் கோன்

31. அண்டர் கோன், இருப்பிடம், அறிந்து உணர்ந்த ஞானிகள். பண்டறிந்த பான்மை தன்னை , யார் அறிய வல்லரோ? விண்ட வேத பொருளையன்றி, வேறு கூற வகையில்லா? கண்ட கோயில் தெய்வமென்று , கை எடுப்பதில்லையே!, இதுவரை 30 பாட்டுக்களைப் பார்த்து விட்டோம். 30-வது பாட்டில் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 30 – பண்டு நான்

30. பண்டு நான் பறித்தெறிந்த, பண் மலர்கள். எத்தனை? பாழிலே செபித்துவிட்ட , மந்திரங்கள் எத்தனை? பிண்டனாய் திரிந்த போது, இறைத்த நீர்கள் எத்தனை? மீளவும் சிவாலயங்கள் , சூழ வந்தது எத்தனை? பிறந்து , வளர்ந்து, பெரியவர்களாகி, நாம் ஏன் பிறந்தேரம், என இறைவனைத் தேடி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 29 – அண்ணலே அனாதியே

29. அண்ணலே அனாதியே, அனாதி முன் அனாதியே! பெண்ணும், ஆணும் ஒன்றலோ, பிறப்பதற்கு முன்னெலாம். கண்ணில் ஆணின் சுக்கிலம், கருவில் ஓங்கும் நாளிலே! மண்ணுலோரும், விண்ணுலோரும், வந்தவாற தெங்கனே.? தாயின் கருவறையில் , கருமுட்டையாகவும், தகப்பனின் விறை அறையில் , சுக்கிலமாகவும், இருக்கும் வரை , அது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 28 – ஓடமுள்ள போதெல்லாம்

ஓடமுள்ள போதெல்லாம், ஓடியே உலாவலாம். ஓடமுள்ள போதெல்லாம் உறுதி பண்ணிக் கொள்ளலாம். ஓடம் உடைந்த போது , ஒப்பில்லாத நாளிலே ! ஆடுமில்லை கோளுமில்லை , யாருமில்லை ஆனதே!, இந்த உடல் எனும் ஓடம் உள்ள போது தான், நாம் இந்த உலகில் அனைத்தையும் அனுபவித்து, ஓடி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 27 – வீடெடுத்து வேள்வி

வீடெடுத்து வேள்வி செய்து மெய்யரோடு , பொய்யுமாய்,மாடு, மக்கள், பெண்டிர், சுற்றம், என்றிருக்கும், மாந்தர்காள்.நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில்,ஓடு பெற்றது அவ்விலை, பெறாது காணும் உடலமே! பெரிய வீடுகள் கட்டி முடித்து, வேள்விகள் செய்து, இந்த உடல் (மெய்) கொண்டவர்களோடு பொய்யுமாய் வாழ்ந்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 26 – நீள வீடு

26. நீள வீடு கட்டுவீர், நெடுங்கதவு சாத்துவீர், வாழ வேண்டும் என்றலோ, மகிழ்ந்திருந்த மாந்தரே! காலன் ஓலை வந்தபோது , கை கலந்து நின்றிடும். ஆலம் உண்ட கண்டர் பாதம், அம்மை பாதம் , உண்மையே. இறைவன் உயிர்களைப் படைத்து , அதில் மாயை எனும் ஒன்றையும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 25 – அஞ்சும், அஞ்சும்

25. அஞ்சும், அஞ்சும், அஞ்சுமே, அனாதியானது அஞ்சுமே!பிஞ்சு பிஞ்சதல்லவோ, பித்தர்காள், பிதற்றுவீர்.நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர், நின்று தெரக்க வல்லீரேல்!அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியாகத் தோன்றுமே! சத்தம் அதாவது ஒலி என்பதை மணி (Bell ) என்று தான் சொல்வோம். அதாவது மணி அடித்தால் சோறு. {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 24 – அஞ்செழுத்திலே பிறந்து

24. அஞ்செழுத்திலே பிறந்து, அஞ்செழுத்திலே வளாந்து, அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஒரெழுத்து அறிந்து கூற வல்லீரேல்! அஞ்சல், அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே. வெளி ய , காற்று வா, வெப்பம் சி , நீர் ம , நிலம் ந {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 23 – தங்கம் ஒன்று

23. தங்கம் ஒன்று, ரூபம் வேறு, தன்மையானவாறு போல். செங்கண், மாலும் ஈசனும் , சிறந்து இருந்தது எம்முள்ளே ! பிங்களங்கள் பேசுவார், பிணங்குகின்ற மாந்தரே! எங்குமாகி நின்ற நாமம், நாமம், இந்த நாமமே !, தங்கத்தை உருக்கி, வெவ்வேறு உருவங்கள் செய்ய முடியும். வெவ்வேறு உருவங்களாக {…}

Read More